இந்த வில்லன் நடிகர் யார்? சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா!

By Ajju · 2/12/2017
தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றாலே படு பயங்கரமாக பெரிய உருவத்துடன் ஆஜானுபாகுவான இருப்பது தான் தகுதி. காலம் செல்ல செல்ல அது வில்லன்கள் கூட வரும் அடியாளுக்கும் அதே தகுதி தான் என மாறியது. அப்படி ஒரு தகுதியுடன் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் விஜய் ஜாஸ்பர். கிட்டத்தட்ட 170 கிலோ உடம்புடன் சினிமாவில் அசால்ட்டாக ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் செய்து அசத்துவார் ஜாஸ்பர். தற்போது 48 வயதான ஜாஸ்பர் இதற்கு முன் என்ன வேலை செய்து வந்தார் தெரியுமா? ஜாஸ்பர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் இரு சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்துள்ளார். காலம் செல்லச் செல்ல அடநஹ் சாப்ட்வேர் வேலை போர் அடித்துப் போக சிறு வயதில் இருந்து தனக்கு பிடித்த சினிமார்விற்குள் நுழைந்தார். முதல் 2003ல் வெளிவந்த சரத்குமார் நாயகனாக நடித்த' 'திவான்' படத்தில் வில்லனாக நடித்தார். வில்லனுக்கேற்ற உடம்பினால் அடுத்தடுத்து சரத்துக்குமாரின் சத்ரபதி, கம்பீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர் அப்படியே சினிமாவில் வாழ்ந்த ஜாஸ்பருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வந்த நாணயம் படம் பெரும் வரவேற்பை கொடுத்தது. சிறு ஏறு கேரக்டரில் நடித்துவந்த ஜாஸ்பர், இந்த படத்தில் ஓடம் முழுக்க டிராவல் செய்யும் ஒரு அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் சத்யராஜுக்கு அடியாளாக நடித்துள்ளார். தற்போது வரும் நல்ல கதைகளில் நடித்து முத்திரை பதிக்க காத்திருக்கிறார் விஜய் ஜாஸ்பர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full