பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ப்ளூ டிக்கை சோழர்கள் இழந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.
இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.
பொன்னியின் செல்வன் படம் :
இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இசை வெளியீட்டு விழா:
மேலும், இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டீவ்ட்டர் ப்ளூ டிக் குறித்த தகவல்:
இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ப்ளூ டிக்கை சோழர்கள் இழந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக ட்விட்டர் நிறுவனம் நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக்கை வழங்கி வருகிறது. இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். மேலும், இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த டிக் கிடைப்பது கிடையாது.
ப்ளூ டிக்கை இழந்த சோழர்கள்:
அதோடு ஆக்டிவாக இல்லாத அக்கவுண்ட்கள் மற்றும் அக்கவுண்டில் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்து இருக்கிறர்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 பட ப்ரோமோஷன்காக நடிகர் ஜெயம் ரவியும், திரிஷாவும் தங்களுடைய twitter கணக்குகளின் பெயரை அருள்மொழி வர்மன், குந்தவை என்று மாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்களுடைய ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.