நாடு முழுவதும் கொரானா வைரஸ்ஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. சாதரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் இந்த கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் தற்போது சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ அன்பழகன் அவர்கள் கோரோனாவால் பாதிக்கப்பட்டு அநியாயமாக உயிர் இழந்துள்ளார். இவரின் இழப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் இடம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தார். பிரபலங்கள் முதல் மக்கள் வரை என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தன் இரங்கலை தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார்.

Advertisement

அதில் அவர் கூறியது, திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல நல்லிதயம் கொண்ட மனிதர். மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்தவர். மேலும், எனது திரைப்படம் “ஆதிபகவன்” படத்தை இவர் தான் தயாரித்தார். அப்போது நான் அவருடன் பல மணி நேரங்கள் பேசினேன். அந்த நினைவுகள் எப்போதும் என் மனதில் நீங்காது இருக்கும். அவரோடு உரையாடிய போது அவர் கலை மீதும் திரைப்படங்கள் மீதும் உள்ள ஆர்வத்தை பார்த்து நான் பலமுறை வியந்து இருக்கிறேன்.

பெருமை மிக்க அவரது அரசியல் பணிகள் மற்றும் அயராத மக்கள் பணிகள் மற்றும் அவரது திரைப்பணிகளுக்காகவும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது இருக்கும் என்பதில் ஐயமில்லை. நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் இந்த covid-19 அவரது உடல்நலத்தை பாதித்தது. அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தை ஜெ.அன்பழகன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement