இந்த வயதிலேயே தந்தையை பெருமையடைய செய்த ஜெயம் ரவியின் மகன்.! லைக்ஸ் குவியும் புகைப்படம்.!
நடிகர் ஜெயம் ரவி,2003 ஆம் ஆண்டு ஜெயம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அனால் இவர் ஏற்கனவே 1993 இல் தெலுங்கில் வெளியான பாவமாறிடி என்ற படத்தில் குழ்நதை நட்சத்திரமாகும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயம் ரவி மகனின் பேச்சு அனைவரையும் அசரவைத்தது. மேலும் அந்த மேடையில் அவரது பேச்சு அனைவரையும் அசர வைத்து. மேலும், தனது தந்தை மிகவும் நன்றாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.இதனால் மேடையில் உள்ள அனைவருமே சிரித்தனர்.
இந்த படத்தில் நடித்த போது தனது சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் ஆரவ். எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சீக்கரமாக டப்பிங் பேசி முடித்துள்ளார் ஆரவ். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அப்பா ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
https://twitter.com/actor_jayamravi/status/1097475086326554624
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற எடிசன் விருது வழங்கும் விழாவில் 'டிக் டிக் டிக்' படத்திற்காக நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்விற்கு சிறந்த அறிமுக குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜெயம் ரவி.