மலேசிய கலைநிகழ்ச்சி பற்றி அஜித்தின் கேள்விக்கு, அதிரடியாக பதிலளித்த ஜெயம் ரவி

By Ajju · 16/1/2018
கடந்த சனிக்கிழமை தமிழ் திரையுலகம் மலேசியாவில் கூடியது. அங்கு ஒரு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்காக பல பிரபல நடிகர்கள் மலேசியா சென்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து பெறப்படும் பணம் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவும் என கூறப்படுகிறது. விஜய், அஜித், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் பல நடிகர்கள் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை அஜித்தை அழைக்க சென்றிருந்த போது, மீண்டும் ஏன் மக்களிடமே பணம் பெற வேண்டும் . நாமே நடித்து அந்த பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டலாமே என கூறி இருந்தார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அஜித்திற்கு மாறான கருத்தினை பதிவு செய்துள்ளார் . அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், அங்கு சென்று மேடையில் பர்பாம் செய்தால் அங்கு நான் நடித்தற்க்காக எனக்கு கொடுக்கும் காசு எனதான் நினைக்கிறேன். நான் செய்யும் வேலைக்கு கிடைக்கும் காசு தான் மக்கள் கொடுக்கும் அந்த காசு என நினைக்கிறேன் எனக் கூறினார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full