சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன ஜோதிகா.! பழசையெல்லாம் மறந்துட்டாங்களா.!
தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “கள்வனின் காதலி” படத்தை இயக்கிய தமிழ் வாணன் என்பவர் தற்போது இந்தி நடிகர் அமிதாப் பச்சனை வைத்து "உயர்ந்த மனிதன் “என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
https://twitter.com/Atlee_dir/status/1035185567628021760
இப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படம் மூலம் இந்தியில் முதன் முறையாக நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதே போல அமிதாப் பச்சனுக்கும் இதுமுதல் தமிழ் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எஸ் ஜெ சூர்யா வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்.ஜே. சூர்யா இயக்கிய 'வாலி' படம் மூலம் தான் ஜோதிகா கோலிவுட் வந்தார்.
அதே போல தனது அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக 'குஷி' படத்தில் ஜோதிவிக்கவிற்கு வாய்ப்பு கொடுத்தார் எஸ் ஜே சூர்யா. அந்த படம் தான் ஜோதிகாவிற்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது ஆனால், அதனை மறந்து ஜோதிகா இப்படி செய்துள்ளது ஏன் என்று தான் புரியவில்லை.