திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மருமகளுக்கு தம்பி ராமையா போட்டிருக்கும் கட்டளை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் ஐஸ்வர்யா-உமாபதி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

மேலும், இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் கட்டி இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

Advertisement

ஐஸ்வர்யா-உமாபதி திருமணம்:

மேலும், ஜூன் 10-ஆம் தேதி ஐஸ்வர்யா- உமாபதி திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தலைவர்கள், கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பின் அனைவருக்குமே நன்றி தெரிவிக்கும் வகையில் அர்ஜுன், தம்பி ராமையா, உமாபதி, ஐஸ்வர்யா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்திருந்தார்கள்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

அப்போது அர்ஜுன், தம்பி ராமையா குடும்பம் ரொம்ப பண்பாடு உள்ள குடும்பம். நானும் தம்பி ராமையாவும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். அப்போது அவர் எனக்கு சம்மந்தி ஆகுவார் என்று தெரியாது. அதேபோல் நான் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி இருந்தேன். அதில் உமாபதி போட்டியாளராக வந்திருந்தார். அவர் திறமைசாலி, அமைதியானவர், நகைச்சுவை குணம் கொண்டவர். அவர் எனக்கு மருமகனாக வருவார் என்றும் தெரியாது என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.

Advertisement

பத்திரிக்கையாளர் பேட்டி:

இந்த நிலையில் அர்ஜுன் மகள் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் ராஜா கம்பீரன் கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், பொதுவாகவே சாதாரண குடும்பங்களில் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் வீட்டில் ஒரு பெண், ஒரு பெண் ஆண் ஒருவரை காதலித்து விட்டால் அதற்கு பல பிரச்சினைகள் நடக்கும். ஆனால், வெளியேவே தெரியாது. அதே பிரபலங்கள் வீட்டில் இந்த காதல் பிரச்சனை வந்தால் மீடியாக்களில் உடனடியாகவே வந்துவிடும். இதனாலேயே தங்களுடைய மரியாதை குறைந்து போய்விடும் என்று பல பிரபலங்கள் பிள்ளைகளோட ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நடந்துக்கொள்கிறார்கள்.

Advertisement

தம்பி ராமையா போட்ட கட்டளை:

அப்படித்தான் அர்ஜுன் மகளின் திருமணமும் நடந்தது. திருமணம் வரை தம்பிராமையா அமைதியாக எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்த உடனே ஐஸ்வர்யா நடிக்கவே கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் தன்னுடைய மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி இருந்ததால் கோடிக்கணக்கில் அவருக்கு சொத்து இருப்பதெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அவருக்கு அந்த அளவுக்கு சொத்தெல்லாம் கிடையாது. அவர் நிறைய சொந்த படங்கள் எடுத்திருந்தார். அந்த படங்களும் பெரிதாக வெற்றியடையவில்லை என்பதால் பொருளாதார ரீதியாக அவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement