நடிகை நக்மா அவர்கள் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி என பல மொழி திரைப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மேலும், நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா?? அந்த அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை. இவருடைய இயற்பெயர் ஜோதிகா சாதனா. நடிகை ஜோதிகா அவர்கள் சந்தர் சாதனா என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகள் ஆவார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் குஷி, பேரழகன், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சந்திரமுகி போன்ற திரைப் படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் இவர் இந்த படத்துக்காக பல விருதுகளை வாங்கி உள்ளார்.

Advertisement

நடிகை ஜோதிகா அவர்கள் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா அவர்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவதையே நோக்கமாகக் கொண்தார். பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார்.

ஜோதிகாவின் ரீ-என்ட்ரி :

இதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்றி கொடுத்தார். அதனை தொடர்ந்து நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 36 வயதினிலே, காற்றின் மொழி, ஜாக்பாட், மகளிர் மட்டும், ராட்சசி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

ஜோதிகாவின் உடன் பிறந்த ரோஷினி :

நடிகை ஜோதிகா உடைய அக்கா நக்மா என்று தான் அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே நடிகை நக்மா ஜோதிகா உடன் பிறந்தவர் கிடையாது. நடிகை நக்மா அவர்கள் சந்தர் சாதனாவின் (ஜோதிகாவின் தந்தை)முதல் மனைவியின் மகள் ஆவார். இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் தான் ஜோதிகா. மேலும், ஜோதிகாவுக்கு முன் இன்னொரு மகளும் பிறந்ததார். அவர் பெயர் ரோஷினி.

Advertisement

ரோஷினி நடித்த படங்கள் :

ரோஷினியும் ஒரு நடிகை தான் சொல்லப்போனால் ஜோதிகா சினிமாவில் அறிமுகம் ஆகும் முன்னரே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார் கார்த்தி நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான சிஷ்யா படத்தில் நாயகியாக நடித்திருந்தார் இதனை தொடர்ந்து அருண் விஜய் நடித்த துள்ளி திரிந்த காலம் படத்தில் தேவி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருப்பார் இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை

Advertisement