தமிழில் பல சீரியலில் நடித்த நடிகை சந்திரா தனது 38 வயதில் திருமணத்தை முடித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘மனசெல்லாம்’ படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

திரைப்படங்களை விட இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது தொலைக்காட்சி தொடர்கள் தான். சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தனது பயணத்தை தொலைக்காட்சி சீரியல் பக்கம் தொடர்ந்தார். சந்திரா, 20க்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் ’கோலங்கள்’  ’மகள்’, ’சொந்தபந்தம்’, ’பாசமலர்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் மலையாளத்திலும் பல தொடர்களில் நடித்துள்ளார் சந்திரிகா. விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டுள்ளார். இறுதியாக தமிழில் தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இருப்பினும் மலையாள தொடர்களில் நடித்து வந்தார். சமீப காலமாக இவரை சின்னத்திரை பக்கம் காண முடிவதில்லை.

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம்செய்துகொண்டார். சந்திரா ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள தொடரில் நடித்து வந்தார். இதே தொடரில் டோஷ் க்றிஸ்டியும் நடித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்து இருந்த சந்திரா, தனது 38 வது வயதில் திருமணத்தை முடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவர்கள் திருமணத்திற்கு பலருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். திருமணத்திற்கு பின் சந்திரா கலை துறையில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். மேலும், தனது சீமந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement