நடிக்க வாய்ப்பில்லாமல் போனால் இதை செய்து பிழைத்துக்கொள்வேன் - தளபதி நாயகி ஓபன் டாக்.!

By Ashok · 24/1/2018
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். மாடலாக இருந்து தனது கடின உழைப்பினால் இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெண்களுக்கான பிரத்யோக ஆடைகள் தயாரிக்கும் பொட்டிக் வைத்துள்ளார். தனது அம்மாவுடன் சேர்ந்து இந்த கடைகளையும் நடத்தி வருகிறார் காஜல். மேலும் , விளம்பர மற்றும் மார்க்கெட்டிங் துறையில் ஒரு டிகிரி முடித்துள்ளார் காஜல். இதை வைத்து இந்த கடைகளை இன்னும் பெரிதாக்க முயற்சி செய்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் நான் இந்த கடைகளில் வரும் வருமானத்தை வைத்து பிழைத்துக்கொள்வேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் காஜல். இந்த கடையில் பெண்களுக்கான லேட்டஸ்ட் ஆடைகள் வித விதமான டிசைன்களில் உள்ளதால் பெண்களுக்காக பிரத்யோகமான கடையாக இருக்கிறது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full