நடிகர் கலாபவன் மணி இறந்த காரணம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி. இவர் பாடகரும் ஆவார். இவர் கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் மலையாள திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

பெரும்பாலும், இவர் திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லனாகவும் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதினையும் வாங்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் 2016 ஆம் ஆண்டு கலாபவன் கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். கலாபவன் மணி குடும்பத்தினர் அவரை உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலாபவன் மணி இறந்து போனார்.

Advertisement

இதையடுத்து அவருடைய இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பின்னர் கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனைக்கு பின் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவருடைய மரணம் குறித்து பல குழப்பங்கள் ஏற்பட்டது. அதோடு கலாபவன் மணி அவர்கள் குடிப்பழக்கம் கொண்டவர்.

அதனால் அவரது மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருக்கலாம்? என்று கலாபவன் மணி குடும்பத்தினர் சந்தேகப்பட்டு வழக்கு தொடுத்தனர். இவருடைய இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க கோரி கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். பின் கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி கடந்த இரண்டு வருட விசாரணைக்கு பின் கொச்சி நீதிமன்றத்தில் கலாபவன் மரணம் குறித்து முடிவு சொல்லப்பட்டது. அதில் அவர்கள் கூறியது, உண்மையிலேயே கலாபவன் மணி அவர்கள் கல்லீரல் பாதிப்பால் தான் மரணமடைந்தார் என்று தெளிவாக பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது.

Advertisement

இந்த நிலையில் கேரளா ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் நடிகர் கலாபவன் மரணம் குறித்து கூறியது, கலாபவன் மணிக்கு பீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்தது. மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பெண்டெயின், பெயிண்ட் அகற்ற பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருள். ஒரு நாளைக்கு 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததால் தான் கலாபவன் மணிக்கு மரணம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கலாபவன் இறந்த அன்று 12 பாட்டில் பீர் குடித்து இருந்தார்.

Advertisement

அதில் மெத்தில் ஆல்கஹாலும் இருந்தது. பொதுவாகவே பீரில் மெத்தில் ஆல்கஹால் குறைவாக தான் இருக்கும், இவர் தொடர்ந்து பீர் குடித்ததால் மெத்தில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து இருக்கிறது. இது அவருடைய உடலில் அதிகளவு சேர்ந்தது. ஏற்கனவே இவருக்கு நீரிழிவு நோயாளி இருந்தது. இதற்காக இவர் இரண்டு வேளையும் மாத்திரை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இந்த மாத்திரைகள் சாப்பிடும்போது கலாபவன் மணி பீர் குடித்ததால் உடலில் வேதி வினைகள் ஏற்பட்டு கடுமையாக பாதித்திருக்கிறது. நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்திருக்கிறார். கல்லீரல் பாதிக்கப்பட்டும் இவர் அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை. ஒரு கட்டத்தில் கல்லீரல் சுத்தமாக செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால்தான் இவர் இறந்தார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement