‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர் ஈரோடு மகேஷ்.இவர் ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரும் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்டர்ட் காமெடியனாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானர். மேலும்,இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் இவரை எல்லாரும் அடைமொழி வைத்து “ஈரோடு மகேஷ்” என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். தற்போது இவர் காமெடி நடிகர் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கி வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் குடும்பமே ஈரோடு மகேசை மறக்கும் அளவிற்கு தற்போது அவர் பிஸியாக உள்ளார். மேலும், சின்னத் திரையில் மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் மகேஷ். இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாகபணியாற்றி வந்த ஸ்ரீதேவியை திருமனம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீதேவி சின்னத்திரை பக்கம் தலைகாட்டவில்லை

Advertisement

மேலும், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு அழகான மகளும் உள்ளார். மேலும், அவளுடைய பெயர் அமிழ்தா. இவர் ஓரு தமிழ் ஆசிரியர் என்பதால் தன் மகளுக்கு அழகான தமிழ் பெயரை வைத்து உள்ளார். மேலும், மகேஷ் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கு என்னுடைய தாய், மனைவி, மகள் தான் என்று அடிக்கடி சொல்லுவார்.

ஆனால், தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அவ்வளவாக பதிவிடுவது இல்லை மகேஷ். இப்படி ஒரு நிலையில் ஈரோடு மகேஷ் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement