நேற்று நடந்த விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் சீசன் 10’ டைட்டிலின் முதல்பரிசு கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோமுக்கு கொடுத்தது தான் இப்போது இணையதளத்தில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாலும் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் பாட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலமாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் கோடி கணக்கிட ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

Advertisement

சூப்பர் சிங்கர் 10:

அந்த வகையில் சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் சுஜாதா, மனோ, அனுராதா ஸ்ரீராம், ஜான் ரோல்டன் ஆகியோர் நீதிபதிகளாக பங்கேற்று இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த விழாவில் மனோவின் 40 வருடத் திரை வாழ்வை கொண்டாடும் விதமாக சில நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சி குறித்து:

மேலும், இறுதி நிகழ்ச்சியில் பாடகர்களுக்கு முன்பே வரப்போகும் திரைப்பட வாய்ப்புகள், நிறைய எதிர்பார்ப்பு தருணங்கள், பிரபலங்களின் வருகை என பல சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற்றது. அதில் விக்னேஷ், ஜீவிதா, ஜான் ஜெரோம், வைஷ்ணவி, ஸ்ரீநிதி ஆகியோர் பைனலில் செலக்ட் ஆகி பாடி இருந்தார்கள். சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிப்படைந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோமுக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் 10 இன் டைட்டிலைட தூக்கி கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

டைட்டில் வின்னர்:

அதாவது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 10 கிராண்ட் பினாலே நேற்று பிரம்மாண்டமாக நடந்தது. நேரடியாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் சின்ன கேப் தாமதத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில், டாப் 5 போட்டியாளர்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி சேர்ந்த ஜான் ஜெரோமுக்கு வெற்றி மகுடத்தை சூடி 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை முதல் பரிசாக கொடுத்தது விஜய் டிவி. அதாவது, ஜான் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றதுக்கு காரணம் கள்ளக்குறிச்சி சம்பவம் தான் என்றும், உண்மையான வின்னர் விக்னேஷ் தான் என்றும் பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Advertisement

கள்ளக்குறிச்சி சம்பவம்:

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தை குறித்து 55க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நடிகர்கள் விஜய், சூர்யா, இயக்குனர் பா ரஞ்சித், ஜி வி பிரகாஷ் என பல பிரபலங்கள் இந்த சம்பவத்துக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர். ஆளுங்கட்சியான திமுகவுக்கு இந்த சம்பவம் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மேலும், விஷ சாராயம் குடித்து உயிர் இருந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement