லாக் டவுன் நேரத்தில் பணக் கஷ்டத்தால் 2000 ரூபாய்க்கு நடிக்கப் போனேன் என்று கமலின் முன்னாள் மனைவி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இதனிடையே கமலஹாசன் அவர்கள் சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கமல் சரிகா திருமணம்

இந்நிலையில் லாக் டவுன் நேரத்தில் சரிகா பட்ட கஸ்டங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சரிகா டெல்லியை சேர்ந்தவர். கமலஹாசனின் டிக் டிக் டிக் என்ற படத்தில் சரிகா சேர்ந்து நடித்திருந்தார். அந்த படத்தின் போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1988 ஆம் ஆண்டு நடிகை சரிகாவை கமலஹாசன் திருமணம் செய்திருந்தார்.கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியினருக்கு பிறந்த மகள்கள் தான் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். இப்படி ஒரு நிலையில் இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Advertisement

பணத்திற்கு கஷ்டப்படும் சரிகா :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சரிகா ‘ஆரம்பத்தில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட். நான் மீண்டும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக நாடகங்களில் நடித்து வருகிறேன். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் முதல் 2700 ரூபாய் வரை தருவார்கள்.அதை வைத்து தான் கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.

கமல் – வாணி கணபதி திருமணம்

கமல் முதல் மனைவி :

இப்படி ஒரு நிலையில் கமல் குறித்து அவரின் முதல் மனைவி வாணி கணபதி அளித்த பழைய பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் வைரலாகி வருகிறது. நடிகர் கமல் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் பிரிந்துவிட்டனர். பின்னர் சரிகாவை திருமணம் செய்த கமல் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பின்னர் அவரையும் பிரிந்தார் கமல்.

Advertisement

கமல் குறித்து வாணி கணபதி :

கவுதமியை பிரிந்ததற்கு முந்தய ஆண்டு பேட்டி ஒன்றில் பேசிய கமல் ‘எனது முதல் மனைவி வாணி கணபதியை விவாகரத்து செய்தபோது, அவருக்கு நிறைய பணம் ஜீவனாம்சமாக தரவேண்டியிருந்தது. அதனால் பொருளாதார பாதிப்புக்கு ஆளானேன். சொந்த வீடு கூட இல்லாத நிலை” என்று கூறி இருந்தார். இதையடுத்து பேட்டி ஒன்றில் பேசிய கமலின் முதல் மனைவி வாணி கணபதி ‘ இந்தியாவில் விவாகரத்துக்காக தரப்படும் ஜீவனாம்சத்தால் ஒருவர் திவாலாகிவிடுவாரா? அல்லது விவாகரத்து பெற்ற பெண் வாழ்நாளெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு அந்த ஜீவனாம்சத் தொகைதான் கிடைக்கிறதா? கமல் சொல்வதை  நம்புகிறீர்களா?

Advertisement
கமல் வாணி கணபதி

எப்போதுமே யார் மீதாவது பழி போட முயற்சிப்பவர் :

எந்த இந்திய நீதிமன்றம் பெண்ணுக்கு அந்த அளவு இழப்பீட்டுத் தொகை தரச் சொல்லி உத்தரவிடுகிறது? கமல் எப்போது சொந்த வீட்டில் வசித்திருக்கிறார்? திருமணமாகி நாங்கள் வாழ்ந்த பத்தாண்டுகளில் வாடகை வீட்டில்தான் வசித்தோம். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் சில காலம் இருந்தோம். விவகாரத்துக்கு பின்னர் கமல் நான் வாழ்ந்த வீட்டில் நான் சம்பாதித்து வாங்கிய பொருட்களை கூட என்னை எடுக்கவிடவில்லை. எப்போதுமே யார் மீதாவது பழி போட முயற்சிப்பவர்.கமலின் திறமையை நான் மதிக்கிறேன்.

அவர் திவாலாக நான் காரணமில்லை ;

ஆனால், திறமைசாலி என்பதற்காக போகிறபோக்கில் யார் மீது வேண்டுமானாலும் பழி போடுவதை அனுமதிக்க முடியாது. மகள்களிடமிருந்தோ, ரசிகர்களிடமிருந்தோ அனுதாபம் பெற அவர் நினைத்தால், யார் பெயரையும் பயன்படுத்தாமல் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். எனக்குத் தெரிந்து அவர் ஒருபோதும் திவாலாகிவிடவில்லை.  அவரிடம் போதிய பணம் இருந்தது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் அதற்கு நான் காரணமல்ல. வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை

Advertisement