விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் பிரபலம் அடைந்த தொடர் “கனா காணும் காலங்கள்”. இந்த தொடரில் நடித்து தன்னுடைய தனித் திறமையால் பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த தொடர் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பட்டாளம் என்ற படத்தின் மூலம் தான் யுதன் பாலாஜி சினிமா உலகில் அறிமுகமானார். நதியா, கனா காணும் சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்கிய காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இது மட்டுமில்லாமல் சிறந்த நடிகருக்கான அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து யுதன் பாலாஜி அவர்கள் மெய்யழகி, நகர்வலம் ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

Advertisement

தற்போது யுதன் பாலாஜி அவர்கள் இணைய தொடரில் நடித்து வருகிறார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து பிரபலங்களும் வெப் சீரீஸ்ஸில் தான் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். அதுபோல் கோலிவுட்டில் பல பிரபல நடிகர்களும் நடித்து வருகிறார்கள். பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி என திரையுலகில் பிஸியாக வலம் வரும் முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து ‘வெள்ள ராஜா’ என்ற வெப் சீரீஸ்ஸில் நடித்து உள்ளனர். இதில் யுதன் பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த இணைய தொடரில் போதை பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்மா நடித்து உள்ளார். அவருடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் தான் யுதன் பாலாஜி நடித்து உள்ளார். அதாவது இந்த தொடரில் இரண்டாவது முன்னணி கதாபாத்திரத்தில் யுதன் பாலாஜி நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர் யுதன் பாலாஜி அவர்கள் காதலர் தினத்தன்று தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு குட்பை சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.: நடிகருடன் யுதன் பாலாஜி அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மனஸ்தா பங்களுக்கும், சண்டைகளும் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். பின் மேலும், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தன்னுடைய மனைவியை அதிகாரப்பூர்வமாக பிரிவதாக பாலாஜி அறிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement

திருமணம் முடிந்து இரண்டு வருடத்திலேயே யுதன் பாலாஜி விவாகரத்து செய்து கொண்ட விஷயம் சினிமா உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாகவே காதலர்கள் காதலர் தினத்தன்று கிப்ட் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். ஆனால், இந்த இளம் திருமண ஜோடிகள் தங்களுடைய வாழ்க்கைக்கு குட்பை சொல்லி இருக்கிறார்கள். இது குறித்து அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. எப்போதும் போல காலையில் எழுந்தேன். கோர்ட்டிற்கு சென்றேன். விவாகரத்து எங்களுக்கு கொடுத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த முடிவு எடுத்தோம். காதலர் தனத்திற்கு இப்படி கடவுள் எனக்கு வித்தியாசமான பிளானை போட்டு இருக்கிறார் என்று எனக்கு தெரியாது. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய காதலர் தின வாழ்த்துக்கள் என சோகத்துடன் கூறியிருந்தார். காதலர் தினத்தன்று இப்படி ஒரு இளம் ஜோடி பிரிவினை கண்டு சமூக வலைத் தளங்களில் பலர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள்

Advertisement