இயக்குனர் பா ரஞ்சித்தை காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கனல் கண்ணன் விமர்சித்து பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காடுவெட்டி. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து இறுதிக்கட்ட படைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காடுவெட்டி படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பட குழுவினர் உட்பட பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் நடிகரும் சண்டை மாஸ்டர்மான கனல் கண்ணனும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது இவர் மேடையில் காடுவெட்டி படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். பின் அவர், ராமர் கோவில் குறித்து மோடி அவர்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது பிரபல நபர் ஒருவர் வீட்டில் விளக்கை ஏற்றி வைக்கவில்லை என்றால் நம்மளை தீவிரவாதிகள் என்று சொல்லுவார்கள் என நக்கல் அடித்து பேசி இருந்தார்.

Advertisement

பா.ரஞ்சித்தை விமர்சித்த கனல் கண்ணன்:

ராமருடைய நிறம் நீலம். அந்த நீலத்தின் பெயரை தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்துக் கொண்டு குறை கூறுவது தவறான செயல் என்று பா ரஞ்சித்தை விமர்சித்து பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி கனல் கண்ணன் சொல்ல காரணம், பட விழா ஒன்றில் பா.ரஞ்சித், வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்ற வில்லை என்றால் கூட எல்லோரும் தீவிரவாதிகள் தான். அந்தளவுக்கு பயங்கரமாக தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது.

பா.ரஞ்சித் சொன்னது:

இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்று பயம் இருக்கிறது. பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை சரி செய்வதற்கும் நம் மனதை பண்படுத்துவதற்கு நம் மூலையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அளிக்கும் கருவியாக இந்த சினிமா கலையை பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் இருந்து தள்ளிவிடாமல் இருக்க நம்மால் முடிந்ததை முழுக்க முழுக்க செய்வோம் என்று பேசி இருந்தார்.

Advertisement

பா.ரஞ்சித் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது. பெரும்பாலும் இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார்.

Advertisement

ரஞ்சித் படங்கள்:

அந்த வகையில் சமீபத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான்.

Advertisement