கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக சக கலைஞர்கள் ஒன்று திரண்டு புகார் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை திருமங்கலம் ஊரில் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவருக்கு 29 வயது ஆகிறது. இவர் கரகாட்ட கலைஞர் ஆவார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். பின் இவர் தனியாக தான் வசித்து வருகிறார்.

இவருக்கு ஆதரவாக அவருடைய தாய் இருக்கிறார். மேலும், பொருளாதார தேவைகளுக்காக பரமேஸ்வரி பல்வேறு கரகாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆடி வருகிறார். இவர் தான் நடமாடும் வீடியோக்களை facebook, instagram, youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதனால் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலமான நபராக திகழ்கிறார்.

Advertisement

இந்த நிலையில் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரியின் மீது சக கலைஞர்கள் ஒட்டுமொத்தமாக புகார் அளித்து போராட்டம் செய்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பரமேஸ்வரி கரகாட்டம் ஆடும் போது ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையிலான கொடிகளை கட்டி ஆடுகிறார். இதனால் நிறைய மோதல்கள் ஏற்படும் நிலை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக இவர் நடனமாடி வீடியோக்களை வெளியிடுகிறார். இது கரக கலைஞர்களுக்கு எதிராக செயல்படும் செயல்.

பரமேஸ்வரி மீதான புகார்:

இதனால் பரமேஸ்வரியின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பரமேஸ்வரி தொடர்பான youtube, twitter, insta என 300-க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்களை தமிழக அரசு முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், மேள கலைஞர், கரகாட்ட கலைஞர்கள் என்று பல சங்கங்களை சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அலுவலகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் கலை கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக சென்று மனு அளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அந்த மாதிரி எந்த ஒரு தவறும் செய்யவில்லை :

இதனைத் தொடர்ந்து கரகாட்ட கலைநர்கள் ஒன்று திரண்டு செய்தியளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் அவர்கள், பரமேஸ்வரி ஆபாசமாக நடனமாடி வீடியோ வெளியிடுவது மட்டுமில்லாமல் மிரட்டல் வேலைகளையும் செய்திருக்கிறார். இவர் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவர். பணத்துக்காக இவர் வேறு ஏதாவது செய்ய வேண்டி தானே. கலையை காரணமாக காட்டி செய்யணுமா? என்றெல்லாம் கொந்தளித்து பேசி இருக்கிறார்கள். இதை அடுத்து பரமேஸ்வரி இடம் விசாரித்த போது, நான் அந்த மாதிரி எந்த ஒரு தவறும் செய்யவில்லை.

Advertisement

பரமேஸ்வரி அளித்த பேட்டி:

நான் ஆபாச வீடியோக்களை வெளியிடவில்லை. என்னிடம் அதற்கான ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறது. என்று தனக்கு வந்த கொலை மிரட்டல், ஆபாச வீடியோக்கள் எல்லாத்தையும் செய்தியாளர்களிடம் காண்பித்து என்னை மிரட்டுகிறார்கள் எனக்கு உதவுங்கள் என்று கேட்டிருக்கிறார். மேலும், என் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகள் வைப்பதன் காரணம் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை. என்னை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது தான் இவர்கள் முடிவெடுத்துகிறார்கள். நானாக சினிமா பாடல்கள் ஆடவில்லை. அவர்கள் கேட்டு அங்கு இருக்கிற பலரும் ஆடிய பிறகு தான் நானும் ஆடினேன் என்று கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement