விஜய் நடிப்பில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியான சர்க்கார் திரைப்படத்தின் போது ஆரம்பித்து காமெடி நடிகர் கருணாஸ் மற்றும் விஜய் ரசிகர்களின் மோதல். “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.

Advertisement

விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். மேலும், நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.

இதையும் படியுங்க : mr லோக்கல் படத்தை மறைமுகமாக கலாய்த்த அருண் விஜய்.!

ஆனால், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்க கூடாது. அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் நான் விரும்பும் நடிகர், அவருக்கும் இது தெரியும். சமூக வலைதளத்தில் நான் பயன்படுத்திய  எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார் கருணாகரன்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கருணாகரன், தளபதி விஜய்யுடன் படங்களில் நடிப்பதற்கு 2 முறை வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை நான் தவறவிட்டேன். எனக்கு முதலில் கிடைத்தது நண்பன் படத்தில் தான். அப்போது, மற்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.  புலி படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அதனை நான் பயன்படுத்த தவறிவிட்டேன். இது குறித்து அவரிடம் கூறியதற்கு கண்டிப்பாக சேர்ந்து பணியாற்றுவோம் நண்பா என்று அவர் கூறினார். எனக்கும் அவருடன் நடிக்க ஆசை தான் என்று கூறியுள்ளார் கருணாகரன்.

Advertisement