தமிழ் சினிமாவில் 90 ஸ் கால கட்டத்தில் கமல், சத்யராஜ், பிரபு என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தவர் பிரபல நடிகர் கஸ்தூரி. தற்போது உள்ள இளம் ரசிகர்களுக்கும் இவர் பரிட்சயமான ஒருவர் தான் காரணம் அம்மணி அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது தான்.

தற்போதும் படங்களில் நடித்து யாரும் கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மேலும், அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

இதையும் படியுங்க : எங்கேயும் எப்போதும், துப்பாக்கி படத்தில் நடித்த நடிகை.! இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

Advertisement

இந்த நிலையில் நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு பாக்கியராஜிற்கு கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். சமீபத்தில் நடிகர் சாந்தனு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பாக்கியராஜ் நடித்த விடியும் வரை காத்திரு படத்தை பாருங்கள் மிக அருமையான படம் என்று கூறியிருந்தார்.

கஸ்தூரியின் ஆலோசனையை கேட்டு ரசிகர் ஒருவர், விடியும் வரை படத்தை பார்த்து விட்டு, தாங்கள் ஒரு விழாவில் சொன்னீர்கள், அதே போல் நான் “விடியும் வரை காத்திரு” (1981 ) படம் பார்த்தேன். சூப்பர் திரில்லர். உங்கள் ஆலசோனைக்கு நன்றி என்று ட்வீட் செய்திருந்தார்.

Advertisement

ரசிகரின் இந்த டீவீட்டிற்கு ரீ – ட்வீட் செய்த கஸ்தூரி, பாக்கியராஜ் மகன் சாந்தனுவை டேக் செய்து , திரைக்கதை அமைப்பதில் கில்லாடியான உன் அப்பாவிடம் ஷேர் செய், என ட்வீட் செய்துள்ளார். இதற்கு சாந்தனு பாக்கியராஜும் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement