சாதி வெறி தூண்டும் வகையில் பேசிய நடிகை மீது வழக்கு பதிவு – விவரம் உள்ளே

By ·
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். சினிமாவை தள்ளிவைத்து விட்டு கடந்த சில வருடங்களாக அரசியல் பேசி வருகிறார். நடிகை குஷ்பூவை போலவே ஏதாவது ஒரு கட்சியில் முக்கிய அரசியல் பிரமுகராக சேர்ந்து விடலாம் என்பது அவருக்கு எண்ணம் போல. இதனால் பல அரசியல் சிறந்த பேச்சு மேடைகளில் அவரை பார்க்க முடிகிறது. அதேபோல் அரசியல்வாதி போலவே, அனைத்து பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்து விடுவார் அவர். சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்து சாதிய வெறிச்செயல் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த செயலை செய்துள்ளனர் என முதலில் பதிவு செய்த அவர், பின்னர் அன்னியர் என போடுவதற்கு பதில் வன்னியர் என பதிவு செய்துவிட்டேன் என கூறி அந்த பதிவை டெலிட் செய்தார்.இதனால் சென்னையில் போலாஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக நீதி சத்திரியர் அமைப்பு சார்பில் கஸ்தூரியை கைது செய்யச்சொல்லி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full