ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. விவசாயிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் தன்னூத்து கிராமம் என்று வரும் பிளாஷ்பேக் காட்சியில் தன்னூத்து மக்களில் ஒருவராக நடித்த இவரின் முகத்தை யாரும் மறக்க முடியாது. தற்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு இவரைப் பற்றி அறிய கண்டிப்பாக வாய்ப்பு இல்லை. ஆனால், இவரைப் பற்றி அறிந்தால் நீங்களே ஆச்சரியபட்டு விடுவீர்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில் என்ற ஊரில் பிறந்தவர் வீர சந்தானம்.

கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த இவர் கும்பகோணத்தில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக சென்னை வந்தார். இளமை காலத்தில் பெரும்பாலும் கோவில்களில் கழித்து வந்தார். கோவில்களில் இருந்த சிற்பங்களை கண்டு பார்த்து ஈர்க்கப்பட்ட வீர சந்தானம் அதன் மூலம் தனது ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார். பின்னர் பிரஸ்கோ என்ற சுவர் ஓவிய கலையில் பயிற்சி பெற்றார். ஓவியர், நடிக,ர் சமூக செயற்பாட்டாளர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இவர் ஈழத்தமிழர்களுக்காக தனது ஓவியத் திறனை பல்வேறு உருக்கமான ஓவியங்களை படைத்திருக்கிறார்.

இதையும் பாருங்க : ராசாத்தி சீரியல் நடிகையா இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்காரு. நீங்கா பாத்தா ?

Advertisement

கலையின் மீதும், சமூகத்தின் மீதும் கடும் ஆர்வம் கொண்டிருந்த இவர் சினிமாவிலும் நுழைந்தார். பாலுமகேந்திரா இயக்கத்தில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான ‘சத்யா ராகம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் ஏற்படாததால் பின்னர் மீண்டும் தனது கலை பணியை துவங்கினார். இருப்பினும். சென்னையில் வசித்த  அவர், பல தமிழ் உணர்வு கூட்டங்களில் கலந்துகொண்டு,  தமிழர்கள் நலனுக்காகப் பேசி இருக்கிறார்.

ஓவிய கலையில் சிறந்து விளங்கி வந்த இவருக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது. பாலுமகேந்திராவின் ‘சத்யா ராகம்’ படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய இவர் அதன் பின்னர் தம்பியுடையான், மகிழ்ச்சி, அரவான், பீட்சா, வில்லா, கத்தி அநேகன், அவள் பெயர் தமிழரசி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

இடையில் எந்த படத்திலும் தோன்றாத வீர சந்தானம் 2017 ஜூலை மாதம் 13 ஆம் தேதி உயிரிழந்தார்.சம்பவம் நடந்த அந்த தினத்தன்று மாலயில்ை நடிகர் வீர சந்தானத்திற்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.நடிகர் வீர சந்தானத்திற்கு வீரசந்தானத்துக்கு சாந்தி என்ற மனைவியும், சங்கீதா, சாலிகா என்று இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

Advertisement
Advertisement