தமிழ் சினிமாவில் தற்போது உள்ள தலைமுறை நடிகைகளில் ஒரு சில நடிகைகள்தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் நடிகை கயல் ஆனந்தியும் ஒருவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்த இவர் முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற பதில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி.

அதன் பின்னர் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது. அந்த படத்திற்கு பின்னர் “த்ரிஷா இல்லனா நயன்தாரா”, ”எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

Advertisement

அதே போல தற்போது இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகை கயல் அனந்தி தற்போது ஏஞ்சல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆனந்தி பேய் வேடத்தில் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று ஸ்ட்ரிக்ட்டாக இருந்த ஆனந்தி தற்போது பேய் வேஷத்தில் நடிக்க கூட தயார் என்கிற அளவுக்கு இறங்கி வந்து விட்டாரே கயல் ஆனந்தி என்று ரசிகர்கள் கொஞ்சம் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement

ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்ததனால் தனது இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆகியுள்ளதாக கூறியுள்ள ஆனந்தி, ஏஞ்சல் படத்தின் மூலம் ரசிகர்கள் தன்னை சிறந்த நடிகையாக ஏற்பார் என்று நம்புகிறாராம். இது ஒருபுறம் இருக்க நடிகை ஆனந்தி “அலாவுதீனின் அற்புத கேமரா” என்று புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “மூடர் கூடம்” படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார் . ஒயிட் ஷேடோஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.



Advertisement
Advertisement