பொது இடத்தில் கீர்த்தி சுரேஷுக்கு காதல் கடிதம் கொடுத்த ரசிகர்.! அதற்கு கீர்த்தி என்ன செய்துள்ளார் பாருங்க.!

By Rajkumar · 13/8/2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை.

விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்தார் கீர்த்தி. ஆனால், இவருக்கு தெம்பூட்டும் விதமாக இவர் நடித்த 'மகாநதி' திரைப்படதிற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

சமீபத்தில் பிரபல நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலைகொடுத்துள்ளார். அதை திறந்தபோது கீர்த்தி சுரேஷின்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றும் அதில் அவரை காதலிக்கிறேன் என்று அந்த நபர் எழுதியிருந்த ஒரு கடிதமும் இருந்ததுள்ளது. அதனை பார்த்துள்ள கீர்த்தி கல்லூரியில் படிக்கும் நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து கொண்டாராம். இதனை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full