தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் கீர்த்தி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

Advertisement

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. சுரேஷ்க்கு தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சாணி காயிதம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு, பஹத் பாசில் போன்ற நடிகர்கள் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

Advertisement

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? :

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லை. பல முறை இவர் நடிகர்களுடன் டேட்டிங் செய்கிறார் என தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்னமாக இருந்தது. அதற்க்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்த வண்ணமாகத்தான் இருந்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யும் நபர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்த வருவதாகவும் இவரின் காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சை கோடி காட்டிவிட்டனர் என்ற தகவல் வெளியாகி வைரலானது .

Advertisement

விளக்கம் கூறிய கீர்த்தி சுரேஷ் தாய் :

இப்படிப்பட்ட நிலையில் தான் இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்று கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் இந்த மாதிரியான ஒரு தகவலை நாங்கள் கேட்க கூட விரும்பவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் திருமணம் தொடர்பாக பொய் புகார் பரப்பும் நபர்களுக்கு இதுதான் எங்களுடைய பதில் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விஷயம் தொடர்பாக நாங்கள் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் தாய் மேனகா சுரேஷ்.

Advertisement