பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். ன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்த இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வசூல் ரீதியாக சாதனையையும் படைத்தது.
இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக பெரிதும் பேசப்பட்டது இந்த படத்தின் வசனங்கள் தான் அதிலும் அடிக்கடி இந்த படத்தில் வரும் ஹீரோவின் அம்மா பேசிய வசனங்கள் அனைத்தும் பல ரசிகர்களுக்கு அத்துபடி என்று கூட சொல்லாமல். ஆனால், அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் என்பது தான் பலரையும் ஆச்சரியபட வைத்தது.
இதையும் பாருங்க : சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் குளு குளு போஸ் – வைரலாகும் அமலா பால் புகைப்படம்.
கே ஜி எப் படத்தில் புடவையை போத்திகொண்டு ஒரு பரிதாபமான அம்மாவாக காட்சியளித்த இவர் நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் மங்கையாக இருந்து வருகிறார். மேலும், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அல்ட்ரா மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கே ஜி எப் படத்திற்கு பின்னர் நடிகை அர்ச்சனா ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், அவை எல்லாம் அம்மணிக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தரவில்லை. இருப்பினும் கே ஜி எப் படத்தின் முதல் பாகத்தில் இவரது காட்சிகள் ரசிகர்களால் தற்போதும் மறக்க முடியாமல் தான் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாகத்திலும் இவரது காட்சிகள் படத்தில் இடம்பெறுமா என்பது தெரியவில்லை.