போலி செய்தி வெளியிடுபவர்களுக்கு கிருத்திகா உதயநிதி பதிவிட்டிற்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா ப்ரொடக்ஷன். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனத்திடம் கல்லல் குழுமம் நிறுவனம் 114 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்து இருந்தது. இதன் அடிப்படையில் அமலாக்க துறை விசாரணை நடத்தி இருக்கிறது.

அப்போது 300 கோடி ரூபாய் வரை முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து லைக்கா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மே மாதம் 17ஆம் தேதி வரை அமலாக்க துறை சோதனை நடத்திருக்கிறது. இதில் பண மோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் அமலாக்கத்துறை இடம் சிக்கி இருக்கிறது.

Advertisement

சர்சைக்குள்ளான உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை:

இதனை அடுத்து அமலாக்க துறை மோசடி செய்த பணத்தை முடக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அப்போது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு கல்லல் குழுமத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன்பின்னர் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.

அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தி:

இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில், M/S Udhayanidhi stalin Foundation என்று இடம்பெற்றிருந்ததை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என்று சமூக ஊடங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும், இது குறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Advertisement

கிருத்திகா உதயநிதி பதிவு:

இந்நிலையில் இது குறித்து கிருத்திகா உதயநிதி தன்னுடைய டீவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னைப் பற்றி தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை பரப்பும் நபர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறைந்தபட்சம் என்னுடைய ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement
Advertisement