ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

Advertisement

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிருத்திகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்னுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இறுதியாக நடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அந்த தொகுதியில் எண்ணெற்ற நலத்திட்டங்களை செய்து அசத்தி வருகிறார். அதே போல சமீபத்தில் தான் உதயநிதிக்கு விளையாட்டை துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.

தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டு இருக்கும் உதயநிதி ‘மாமன்னன்’ படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்து இருந்தார். அவரது மகனோ ஸ்போர்ட்ஸ்ஸில் அசத்தி வருகிறார். உதயநிதியின் மகன், ஒரு கால்பந்து வீரர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து உதயநிதியின் மகன் தேர்வாகி இருந்தார்.

Advertisement

இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். உதயநிதி அமைச்சர் ஆனதில் இருந்தே அவரது மகன் இன்பநிதியும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை திமுகவிற்கு எதிரானவர்கள் அதிகம் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.

Advertisement

அதே போல அரசியல் வாதி மகனுக்கு தோழி இருக்க கூடாதா என்ன என்று இன்பநிதிக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் உதயநிதியின் மனைவி கிருத்திகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘காதலிப்பதற்கு அதை வெளிப்படுத்துவதற்கும் எப்போதும் பயப்பட கூடாது. இயற்கையை அதன் முழு மகிமையில் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கிருத்திகாவின் இந்த பதிவு மகனின் லீக் புகைப்படங்களை குறிப்பிட்டே சூசகமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement