பா ஜ க பிரமுகரால் உடைக்கப்பட்ட நிலையில் உதவி கேட்டு உருக்கமான பதிவை வெளியிட்ட kpy வெங்கடேஷ்.
உயிர் காக்கும் கருவி தேவை என்றும் ஆதரவற்றோர் இல்லம் இருந்தால் கூறுங்கள் என்றும் கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வெங்கடேஷ். இவர் மதுரை மாவட்டம் தபால் தந்தி பகுதியை சேர்ந்தவர். இவர் kpy, அசத்தபோவது யாரு என்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது மட்டுமல்லாமல் சமுக வலைதளங்களில் அரசியல் கருத்துகளையும் பதிவு செய்யப்பட்டு வந்தார்.
அதே போல் சில மாதங்களுக்கு மூன் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் ஒரு கருத்தினை சமுக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார். அந்த கருத்தினை பார்த்த சில பாஜக கட்சியினர் ஜூன் 15 தேதி அவரை கடத்தி அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. கடத்திய கும்பலின் அடி தாங்க முடியாமல் கதற அருகில் இருந்தவர்களுக்கு சத்தம் கேட்க அருகில் இருந்தவர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையில் கடத்திய கும்பல் அவரின் இரு கால்களையும் உடைத்து விட்டு சென்றுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரித்த நிலையில் 6 பாஜகவினரை கைது செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் காமெடி நடிகர் வெங்கடேஷ் தனது சமுக வலைதளம் பக்கத்தில் உதவி கேட்டு உதவி கேட்டு ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் உயிர் காக்கும் கருவி தேவை என்றும் ஆதரவற்றோர் இல்லம் இருந்தால் கூறுங்கள் என்றும் “உயிர் காக்கும் உதவி தேவை “ அடிபட்டு உடைந்த 2 கால்களும் குணமாக சில மாதங்கள் ஆகும்.
அது ஓரளவு அது குணமானாலும் வரைக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள் துவங்கவேண்டும் அதற்க்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் கூட அதற்க்கான பயிற்சி இருக்க கூடும் என்றும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார். தரை தளத்தில் காற்றோட்டமான படுக்கை வசதி, நர்சிங் வசதி, வெஸ்டர்ன் கழிவறையுடன்,
எனக்கு உள்ள சிறிது உடல் உபாதைகளுக்கு கூட ஆள்இருந்து பார்த்துகொள்ளும் வகையில் ஆதரவற்றோர் இல்லம் அல்லது பெய்டு முதியோர் இல்லங்கள் இருந்தாலும் மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனை இருந்தால் கூட சிறப்பு என்றும் அவர் கூறினார். மதுரைக்கு அருகில் 130 கிலோ மீட்டர்களுக்குள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதம் 10 தேதிக்குள் தெரிவித்து உதவலாம் என்றும் பதிவு செய்திருந்தார்.