நானும்,சுந்தரமும் பாழாய் போன இந்த விஷயத்தால் தான் நாசமாக போனோம்..! சிறையில் அபிராமி கதறல்.!

By Ajju · 8/9/2018
டப்ஸ் ஸ்மாஷ், முயூசிகலி போன்ற மோகம் இளைஞர்கள் மத்தியில் ஒரு தீராத மோகமாக இருந்து வருகிறது. சமூக ஊடகத்தில் பிரபலமாக வேண்டும் என்று இது போன்ற விடீயோக்களுக்காக தேவையற்ற பல விடயங்களை செய்து வருகின்றனர். அப்படி ஒரு மோகம் தான் அபிராமியின் வாழ்க்கையை சீரழித்து உள்ளது என்று சிறை கைதிகளிடம் கூறியுள்ளார் அபிராமி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கள்ள காதலுடனுடன் வாழ வேண்டும் என்பதற்காக தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தனது குழந்தைகளை கொன்ற அபிராமி தற்போது புழல் சிறையில் அடைக்கபட்டுள்ளார். சிறையில் அடைபட்ட நாளில் இருந்தே கைதிகள் யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் தனிமையில் இருந்து வந்தார் அபிராமி. ஆனால், தற்போது சக கைதிகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்து உள்ளாராம். அபிராமி சிறைக்கு சென்ற பின்னர் அபிராமியின் கள்ள காதலர் சுந்தரத்துடன் செய்த பல்வேறு முயூசிகலி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், இந்த முயூசிகலி மோகம் தான் அபிராமியின் வாழ்க்கையை சீர் குலைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சிறை கைதிகள் யாரிடமும் பேசாத அபிராமி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பேசி வருகிறார். அவர்களுடன் பேசும் போது இந்த பாழாய் போன முயூசிகலியால் தான் என்றும், நானும் சுந்தரமும் முயூசிகலி மூலம் தான் பழக்கமானோம் என்று கூறியுள்ளார். அபிராமியின் இந்த அவளை நிலை வேறு யாருக்கும் ஏற்படகூடாது. தற்போது பல இளசுகள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் இந்த முயூசிகலி மோகம் இருந்து வருகிறது. அபிராமிக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முயூசிகலி போன்ற மேகத்தை மக்கள் விடுத்தாள் அது சமூகத்திற்கு தான் நல்லது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full