அன்பே சிவம் படத்திற்கு பின்னர் சுந்தர் சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - மனம் திறந்த குஷ்பூ.

By Rajkumar · 16/6/2020

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல நடிகரும் ஆவார். மேலும்,இவர் தலைநகரம் படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானவர். ஆரம்ப காலத்தில் இவர் மணிவண்ணனிடம் உதவியாளராக தான் இருந்தார். பின்னர் 'முறை மாமன்' என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதற்கு பிறகு 'உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், அன்பே சிவம், அரண்மனை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2013 ஆம் வெளியான படம் 'அன்பே சிவம் '. உலகநாயகன் கமல் நடித்த இந்த படத்தில் நடிகை கிரண், மாதவன் போன்றவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சுந்தர் சி தான் இயக்கினார் என்று பலருக்கும் சில காலங்கள் கழித்தே தெரியவந்தது.இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2013 ஆம் வெளியான படம் 'அன்பே சிவம் '.

உலகநாயகன் கமல் நடித்த இந்த படத்தில் நடிகை கிரண், மாதவன் போன்றவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சுந்தர் சி தான் இயக்கினார் என்று பலருக்கும் சில காலங்கள் கழித்தே தெரியவந்தது. மேலும் இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்களிடம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை பின்னர் சில வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினார்கள். இந்தநிலையில் இந்த படத்திற்கு பின்னர் சுந்தர் சி எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து குஷ்பு சமீபத்தில் கூறியுள்ளார்.

https://twitter.com/khushsundar/status/1272500627516489728

சமீபத்தில் ட்விட்டர் வாசி ஒருவர், அன்பே சிவம் திரைப்படம் Imdb ரேட்டிங்கில் 8.7/10 மதிப்பெண்களை பெற்று டாப் 10 ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பூ, இந்த திரைப்படம் கமர்சியலாக வெற்றி பெற்றிருந்தால் என்னுடைய கணவர் இரண்டு ஆண்டுகள் வீட்டில் சும்மா இருந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full