லட்சுமி ராமகிருஷ்ணன் 1970ஆம் ஆண்டு கேரளாவின் பாலகாட்டில் பிறந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணசாமி இந்தியாவின் மிகப்பெரிய நூல் வியாபாரி. லட்சுமிக்கு அவரது 15 வயதில் ராமக்கிருஷ்ணனுடன் திருமணம் செய்து வைத்தார் அவரது அப்பா கிருஷ்ணசாமி.

Advertisement

இதனால் வேறு வழியின்று தனது கணவருடன் செல்ல வேண்டியதாயிற்று. அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் IITல் படித்து வெளிநாடுகளில் வேலை செய்து வந்தார். இதனால் தனது 15 வயதில் இருந்து 35 வயது வரை ஓமன் நாட்டில் தன் கணவருருடன் வாழ்ந்து வந்தார் லட்சமி.

இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 1985ஆம் ஆண்டு 2005ஆம் ஆண்டு வரை ஓமன் நாட்டில் இருந்து பின்னர் 2005ல் இந்தியா வந்தார் லட்சுமி. அதன்பின்னர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்காக கனவருடன் கோயமுத்தூர் வந்து செட்டில் ஆனார் லட்சுமி.

Advertisement


Advertisement

ஓமன் நாட்டில் இருந்தபோது அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் லட்சுமி. அங்குள்ள பெண்களின் திறமையை வளர்க்க ஒரு பவுண்டேசனை துவங்கி அவர்களுக்கு திறமையை வளர்க்கும் பல பயிற்சிகளை கொடுத்து வந்தார். இதனால் ஓமன் நாட்டின் விருதினையும் பெற்றுள்ளார் லட்சுமி.

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் லோஹிததாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டினை தன் படத்திற்கான சூட்டிங்கிற்காக கேட்டார். இதன் மூலம் திரையுலகில் அறிமுகம் கிடைத்த லட்சுமி. 2005ல் இருந்து 6 ஷார்ட் பிலிம்களை இயக்கினார்.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற படத்திலும் நடித்தார். அதன்பின்னர், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கினார். மேலும், பொய் சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவரேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய், ரௌத்திரம், லீலை, சென்னையில் ஒரு நாள், என பல தமிழ் படங்களில் நடித்தார்.

இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட வேலை என்னவென்றால், ஜி தமிழின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியே ஆகும். தனி மனிதனின் பிரச்சனையை போதுமேடையில் போட்டு ஊர் முழுவதும் காட்டுவதே இந்த நிகழ்ச்சியின் சாராம்சம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாக விமர்சிக்கபட்ட மனிதர் ஆனார் லட்சுமி ராமகிருஷ்ணன். மேலும் இந்த ஷோ’வை மையமாக வைத்து கலாய்க்கும் பல ஷோ’க்கள் வந்தது. என்னதான் களாய்த்தாலும் அந்த ஷோ’வை தற்போது வரை நடத்தி வருகிறார் லட்சுமி.

Advertisement