தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயனின் பதிவை வெளிநாட்டு பத்திரிக்கையாளர் பாராட்டி இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். மேலும், கனா படத்தில் இவர் பாடிய ‘வாயாடி பெத்தப் புள்ள’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருந்தது.

Advertisement

சிவகார்த்திகேயனின் மகன் :

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த சிவகார்த்திகேயன், 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி, அம்மாவும் குழந்தையும் நலம் என்று தனது மகன் தனது கையை பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

Sk வீட்டின் பொங்கல் கொண்டாட்டம் :

இந்த பதிவிற்கு பல லட்சம் லைக்ஸ்கள் குவிந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டில் தன் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் தனது மகனுக்கும் மேட்சிங்காக சட்டையை அணிவித்து செம குயூட் போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

சிவகார்த்திகேயனை புகழ்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் :

இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை கண்ட லெபனான் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் ‘சிவகார்த்திகேயனின் பதிவை எப்போது பார்த்தாலும் அது எனக்கு புன்னகையை அளிக்கிறது. அதை கண்டாலே நல்ல எண்ணமும், நல்ல உணர்வையும் கொடுக்கிறது. குடும்பத்தின் மீதும் அவர் ரசிகர்கள் மீதும் அவர் காட்டும் அன்பு, இந்திய கலாச்சாரத்தை அவர் பிரதிபளித்து இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்தியாவிற்கு அழைத்த சிவா :

இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் ‘உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி கதா மக்குள், உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். தயவு செஞ்சி இந்தியா வாந்து எங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று’ என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் இறுதியாக நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. இந்த படத்தை தொடர்ந்து டான், ஐயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘ஜலபுல ஜங்’ பாடல் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement