சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர் தான் என்று லிங்குசாமி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லிங்குசாமி. இவர் திருப்பதி புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குநர் விக்ரமன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

பிறகு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி முதன் முதலாக தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

Advertisement

இயக்குனர் லிங்குசாமி திரைப்பயணம்:

சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ‘தி வாரியர்’ படத்தை இயக்கினார். இப்படத்தில் ராம் பொத்தினேனி காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டது. தமிழில் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்.

சண்டக்கோழி படம் :

இதனை அடுத்து லிங்குசாமி அவர்கள் ரன் படத்தின் பார்ட்-2 எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சண்டக்கோழி படம் குறித்து லிங்குசாமி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தில் விஷால், ராஜ்கிரன், மீரா ஜாஸ்மின், லால், சுமன் ஷெட்டி, கருப்புசாமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

Advertisement

இயக்குனர் லிங்குசாமி பேட்டி:

பின் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்நிலையில் சண்டக்கோழி படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இது தொடர்பாக லிங்குசாமி பேட்டியில், முதலில் சண்டக்கோழி படத்தின் கதையை நான் விஜயிடம் தான் சொன்னேன். அவர் முதல் பாதியை கேட்டார்.

Advertisement

சண்டக்கோழி படம் குறித்து விஜய் சொன்னது:

பின் ராஜ்கிரன் என்ட்ரிக்கு பிறகு கதையைக் கேட்கவே இல்லை. படம் வெற்றி அடைந்த பிறகு
ஒரு நாள் சந்திப்பில் லிங்குசாமியை பார்த்த விஜய், சண்டக்கோழி படத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது
என்று கூறினார். அதற்கு நான், நீங்கள் தான் இரண்டாம் பாதி கதையை கேட்கவில்லையே என்று சொன்னேன். அதற்கு விஜய், இதுதான் கரெக்ட். இப்போ விஷால் ஃபீல்டுக்கு வரணும் என்று இந்த படம் அமைந்திருக்கிறது என்று சொன்னார்.

Advertisement