பொதுவாகவே சினிமா உலகில் ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து விட்டால் அதனை தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது பாகம் என்று தொடர்ச்சியாக படங்கள் வருவது வழக்கம். அந்த வகையில் தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சிங்கம், சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்கள் இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கின்றன. இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி நடித்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்திக்.

2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளிவந்த படம் கைதி. இந்த படத்தில் நரேன், யோகிபாபு, பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது. ஜப்பானில் கூட இந்த படம் வெளியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் Nsk ரம்யாவா இது ? குழந்தை பிறந்த பின் எப்படி ஆகிட்டாங்க பாருங்க – லேட்டஸ்ட் புகைப்படம்.

Advertisement

அதோடு இந்த படம் வெளிவந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இரண்டாம் பாகம் எடுங்கள் என்று சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது என்று லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்தில் சொல்லி இருந்தார். அதில் அவர் கூறியது, தற்போது கைதியின் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படம் ஆகிவிட்டது. கைதியின் இரண்டாம் பாகம் எடுக்க 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் தற்போது கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதே போல் கார்த்தி அவர்கள் விருமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இருவரும் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது கார்த்திக் அவர்கள் பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement