மெர்சல் படத்தின் துவக்கத்தில் விமான நிலையத்தில் இலங்கை தமிழ் பேசும் ஒரு பெண்ணாக ஒரு பெண் நடிதிருப்பார். மருத்துவராக வேட்டியுடன் வரும் விஜயை விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்வது போல் ஒரு காட்சி வரும். அந்த காட்சிக்குப் பிறகு
அடுத்த முறை வரும் போது வேட்டிக்கு பதிலாக வேறு உடை அணிந்து வாருங்கள் என சொல்வார் ஒரு பெண், அதற்கு தளபதி நான் ஆயிரம் முறை வந்தாலும் இப்படி தான் வருவேன், என் அம்மாவை எப்படி நான் மாற்ற முடியும்’ என விஜய் கூறுவார்.அந்த காட்சியில் ஒரு பெண் வருவார் தெரியுமா? அந்த காட்சியில் நடிக்க அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று தெரியுமா? அவர் தற்போது என்ன செய்கிறார்? தளபதியை எப்படி சந்தித்தார் என தெரியுமா?

இதையும் படிங்க: மெர்சலில் நீங்கள் பார்க்க தவறவிட்ட சில விஷயங்கள் – அட்லீயின் ட்விஸ்ட் !

Advertisement

அவரது பெயர் ஷனா மகேந்திரன், அவர் ஒரு லண்டன் டீவி தொகுப்பாளினி ஆவார். இவர் இலங்கையின் மட்டக்களப்பை சேர்ந்தவர். இவர் ,ஷனா மகேந்திரன் ஷோ’ எனற ஒரு நிகழ்ச்சியை லண்டன் தமிழ் தொலைகாட்சியான IBC TAMILல் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் இதற்கு முன்னர் ஒரு படத்தில் நடிகையாகவும் நடித்துள்ளார்
இலங்கையில் வெளிவந்த மண் என்ற படத்தின் கதாநாயகி ஷனா மகேந்திரன். இந்த படத்தில் நடித்த இவருக்கு விருதும் கிடைத்துள்ளது. தற்போது மெர்சல் படத்தில் 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையில் நடித்துள்ளார் ஷனா. மெர்சல் படத்தில் இவர் நடித்த அந்த காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் இதற்கு முன்னர் ஒரு படத்தில் நடித்திருந்ததாலும். மேலும், அந்த காட்சிக்கு ஒரு சரியான இலங்கை பெண் தேவைப் பட்டதாலும் அந்த சிறு கதாபத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஷனா மகேந்திரன்.
விஜய் அண்ணாவை முதன் முதலாக பார்க்கும் போது ஷாக் ஆகிட்டேன் அவர் ரொம்ப அமைதியானவர், அப்படி ஒரு மேனரிசத்தை தற்பது வரை நான் பார்த்து இல்லை” எனக் கூறி மெர்சலாகிக் கொண்டிருக்கிறார் ஷனா.

Advertisement
Advertisement