தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

கடைசியாக இவர் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் ‘மாறன்’. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இந்த படம் நேற்று வெளியாகி இருக்கு. இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

மாறன் படம் பற்றிய தகவல்:

ஜகமே தந்திரம் படத்தின் படு தோல்வியை தொடர்ந்து வெளியாகியிருக்கும் மாறன் திரைப்படம் தனுஷிற்கு கைகொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் குறித்து நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் திடீரென இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளத்தில் ‘உண்மையை அப்புறம் சொல்றேன்’ என்று பதிவு செய்தார்.

கார்த்திக் நரேன் பதிவிட்ட பதிவு:

இந்த பதிவு சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் திடீரென அந்த பதிவை இயக்குனர் கார்த்திக் நரேன் டெலிட் செய்துவிட்டார். ஏற்கனவே மாறன் படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்திக் நரேன் திடீரென விலகி விட்டதாகவும், தனுஷ் தான் மீதி படத்தை இயக்கினார் என்ற ஒரு வதந்தியும் கிளம்பி இருந்தது. இந்த நிலையில் தற்போது உண்மையை அப்புறம் சொல்றேன் என இயக்குனர் கார்த்திக் நரேன் பதிவிட்டு டெலிட் செய்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

கார்த்திக் நரேனின் பதிவை விமர்சிக்கும் ரசிகர்கள்:

இதற்கு ரசிகர்கள் பலரும் என்னாச்சு? என்ன உண்மை? என்று கேட்டுக் கொண்டு வருகிறார்கள் ஆனால், இயக்குனர் கார்த்திக் நரேன் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் இயக்குனர் கார்த்திக் நரேன் பதிவை குறித்து விமர்சித்து கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். தற்போது கார்த்திக் நரேன் பதிவை விமர்சிக்கும் பதிவுகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக உலா வருகிறது. அப்படி என்ன தான் கார்த்திக் நரேன் உண்மையை சொல்ல போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

கார்த்திக் நரேனின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் நரேன் அவர்கள் நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்தாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு பைனான்சியல் பிரச்சனை இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் மாஃபியா என்ற படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement