-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அம்மா அப்பாவிற்காக 3 ஆண்டுகளாக பிரம்மாண்ட கனவு வீட்டை கட்டி வரும் மாதம்பட்டி ரங்கராஜ்

0
57

தன்னுடைய அப்பா, அம்மாவிற்காக மாதம்பட்டி ரங்கராஜ் பிரம்மாண்டமாக வீடு கட்டி வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் தான் ரங்கராஜ். இவர் ‘மாதம்பட்டி பாகசாலா’ என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் மூலம் தான் இவர் பிரபலம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார். அதற்கு பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். மேலும், இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து முதல் சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

மாதம்பட்டி ரங்கராஜ் வீடு:

தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் மாதம்பட்டி ரங்கராஜுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் பிரம்மாண்டமாக மாதம்பட்டி ரங்கராஜ் வீடு கட்டியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய அப்பா அம்மாவிற்காக தன்னுடைய சொந்த ஊரில் மூன்று வருடமாக பிரம்மாண்டமாக பார்த்து பார்த்து வீடு கட்டிக் கொண்டு வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சொன்னது:

இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் சொன்னது, இது மாதம்பட்டி ரங்கராஜ் உடைய வீடு தான். அவருடைய அப்பா, அம்மாவிற்காக பார்த்து பார்த்து மூணு வருஷமாக கட்டிக் கொண்டிருக்கிறார். இது எதற்காக கட்டுகிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக செய்கிறார். ரொம்ப நல்ல மனிதர். இந்த வீட்டினுடைய பூஜைக்கு எல்லாம் நாங்கள் சென்றிருந்தோம் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news