தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது.
இந்த ஊரடங்கு நிலையில் பல நடிகர், நடிகைகளும், பிற துறை பிரபலங்களும் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது youtube தளத்தின் வாயிலாக அனைத்து துறை கலைஞர்களுடனும் உரையாடி வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் நடிகர் மாதவனுடன் தனது youtube வழியாக உரையாடி உள்ளார்.
அந்த உரையாடலை தற்போது மாதவன் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதே போல இந்த உரையாடலின் போது மாதவன் தனது பல்வேறு படங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்த போது லிங்கு சாமி இயக்கத்தில் வெளியான ரன் படம் குறித்தும் பேசி இருந்தார். அதே போல இந்த படத்தில் தான் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார் மாதவன்.
வீடியோவில் 29:28 நிமிடத்தில் பார்க்கவும்
அந்த பேட்டியில் பேசிய மாதவன் ரன் படத்திற்கு முன்பாக ஒரு ஆக்ஷன் கதையில் நடிக்க தான் பல்வேறு கதையை கேட்டு வந்ததாகவும் ஆனால், எதுவும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், லிங்குசாமி ‘ரன்’ படத்தின் கதையை கூறும் போது. அந்த ஷட்டர் சீன் சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த கதை எனக்கு ஓகே ஆனது. மேலும், இது தான் என் ஆக்ஷன் என்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று முடிவு பண்ணேன்.
அதே போல அந்த படத்தின் ப்ரீவ் ஷோவை, மணி சார், கௌதம் மேனன் அனைவருக்கும் காண்பித்தேன். அப்போது ஆரம்பத்தில் அனைவரும் சாதாரணமாக பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால், அந்த ஷட்டர் சீன் வந்ததும் கௌதம் மேனன் எல்லாம் கேட்ட வார்த்தை எல்லாம் பேசி என்னடா மேடி என்று அசந்து போனார். அப்போதே தெரியும் இந்த படம் ஹிட் தான் என்று தெரிந்துவிட்டது என்று கூறியுள்ளார் மாதவன்.