500ரூபா கொடுத்தா பெருமாளே Selfie எடுப்பார், 1000ரூபா குடுத்தா பெருமாள வீட்டுக்கே கூட்டிட்டு வருவார் - மதுரை முத்துவின் அர்ச்சகர் காமெடி வைரல்.

By Arun · 13/2/2024

கோவில்களில் அச்சகர்கள் செய்யும் வேலைகள் குறித்து மதுரை முத்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு என்ற இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன்பின் தொலைக்காட்சி சிரிப்புயாளராக மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

https://twitter.com/Attitudism/status/1756741915989688656

அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்த பிரபலத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.

இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மதுரை முத்து சின்னத்திரை கிடைக்கவில்லை வந்து விட்டார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குத் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.

View this post on Instagram

A post shared by Tamil atheist (@tamil_atheist)

அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் விஜய் நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாளராக இருப்பவர் மதுரை முத்து. முதல் சீசனில் மதுரை முத்து நகைச்சுவை கோமாளியாக வந்திருந்தாலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து இருந்தார்.

இந்நிலையில் மற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வருமானம் ஈட்டி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதுரை முத்து கோவில்களில் அர்ச்சகர்கள் செய்யும் கூத்துக்களை கேலியாக பேசியிருக்கிறார் அந்த நிகழ்ச்சியில் பேசி இருக்கும் அவர் ' இப்போது எல்லா இடத்திலும் ஸ்பெஷல் அர்ச்சனை இருக்கிறது.50 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் விபூதியையும் குங்குமத்தையும் அதிகமாக கொடுப்பார் நூறு ரூபாய் கொடுத்தால் உள்ளே அழைத்து சாமியை நேராக பாருங்கள் என்று சொல்வார்

https://twitter.com/iam_Vsk/status/1756652886870962528

ஒருத்தன் 200 ரூபாய் கொடுத்தால் வேட்டை திறந்து நேராக உள்ளே வந்து நில்லுங்கள் என்பார் 300 ரூபாய் கொடுத்தால் வாங்க பக்கத்தில் பெரும்பாலுடன் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார். 500 ரூபாய் கொடுத்தான், பெருமாள் கிட்ட கொடுங்கள் அவரு எடுப்பார் என்றார். ஒருத்தன் 1000 கொடுத்தான், கோபம் வந்துடிச்சி அவனுக்கு கோபம் வந்துடிச்சி நீங்க ஏன் இங்க வரீங்க பெருமாள தூக்கிட்டு சாய்ந்திரம் வீட்டுக்கு வருவேன்ல என்று சொன்னார்' என்று பேசி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full