தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்தாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு பைனான்சியல் பிரச்சனை இருக்கிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி உள்ள படம் மாஃபியா. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அருண் விஜய்க்கு வில்லனாக டிகே என்ற ரோலில் நடித்து உள்ளார். அதிலும் படத்தில் ஹீரோ அருண் விஜய்க்கு இணையாக படு ஸ்டைலாக இருக்கிறார் பிரசன்னா. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து உள்ளது.

இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இந்த ட்ரைலரில் நடிகர் பிரசன்னாவின் பெயர் வரவில்லை. இதனை பார்த்து ரசிகர்கள் ஏன் நடிகர் பிரசன்னாவின் பெயர் வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் பிரசன்னாவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் கூறியது, இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை முதலில் நான் அருண் விஜய் அவர்களிடம் தான் கொண்டு போனோம். அவரிடம் கதை சொல்லும் போதே நான் இந்த கதாபாத்திரம் பிரசன்னா பண்ணா நல்லா இருக்கும் என்று சொன்னேன். அவரும் சரி, இதற்கு பிரசன்னா தான் நன்றாக இருப்பார் என்று சொன்னார்.

Advertisement

இந்த படத்தின் ட்ரைலரை பாத்தீங்கன்னா ரெண்டு பேரையும் சரி சமமாகத் தான் காண்பித்து இருப்போம். அது என்னனா, ஒரு சிம்பிளான எடிட்டிங்கில் தான் நடிகர் பிரசன்னா பெயர் சேர்த்த முடியவில்லை. மேலும், மியூசிக் டைரக்டர் பண்ணி இருந்தா சாங்க்ல பிரசன்னா பெயர் வைக்க முடியல. மியூசிக் டைரக்டர் சாங்
ரெடி பண்ணி தந்தாருண அவர் பெயரை வைத்திடலாம். இது ஒரு டெக்னிக்கல் காரணம் தான். மற்றபடி எனக்கு இவர்கள் ரெண்டு பேருமே முக்கியம் தான். இருவரையும் சரிசமமாக தான் நடத்தப்படுகிறது என்று இயக்குனர் கூறினார்.

விடியோவில் 18 : 25 நிமிடத்திற்கு மேல் பார்க்கவும்

Advertisement

இதற்கு பிரசன்னா அவர்கள் கூறியது, டிரெயிலரை பார்த்துட்டு என்னுடைய நண்பர்களும், தெரிந்தவர்களும் ஏன் உங்க பெயர் போடவில்லை என்று என்னிடம் கேட்டார்கள். நான் இதை எப்படி பார்க்கிறேன் என்றால், அருண் விஜய் இந்த இடத்திற்கு வருவதற்கு பல போராட்டங்கள், கஷ்டங்களை அனுபவித்து தான் இந்த இடத்திற்கு அதாவது பெயர் போட்டு வரும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். எனக்காக இத்தனை பேர் என்னை பற்றி யோசிக்கிறார்கள் என்று நான் சந்தோசம் தான் படிக்கிறேன். எனக்கான நேரம் வரும் போதும், என்னுடைய பெயர் வரும் போது அதற்காக இவ்வளவு பேர் உள்ளதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்த தருணத்தில் அவர்களிடம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Advertisement
Advertisement