அம்முவை நினைத்து கவலைப்படும் விஜய், காவிரி கொடுத்த சர்பிரைஸ் - விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, சாரதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அப்போது விஜய் வீட்டிற்கு வெளியே நிற்கிறார். காவேரி, விஜயை வீட்டிற்குள் அழைத்தார். அதற்கு பின் விஜய்- காவேரி இருவரும் சாரதாவிற்கு அட்வைஸ் சொல்லினார்கள். அந்த சமயம் பார்த்து விஜய்க்கு போன் செய்து தாத்தா, அம்முவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக சொன்னார். உடனே பதறி அடித்துக் கொண்டு காவிரி, விஜய் இருவரும் இணைக்க போனார்கள். அங்கு காவிரி, அம்முவை ரொம்பவே கவனமாக பார்த்துக் கொண்டார். அது எல்லாம் பார்த்து விஜய்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
காவிரி, பள்ளியில் மதர்ஸ் டே விழா நடைபெற இருப்பதால் அம்முவை தயாராகி வர சொன்னார். அம்மு, என்னுடைய அம்மா இல்லாமல் நான் எப்படி விழாவில் கலந்து கொள்வது என்று சோகமாக சொன்றார். இருந்தாலும் காவேரி, அம்முவை சமாதானம் செய்து பள்ளிக்கு வர சொன்னார். பின் இதைப் பற்றி காவிரி, விஜய் இடமும் பேசி இருந்தார். விஜய், என் மகள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நாங்கள் பள்ளிக்கு வரவில்லை என்றார். காவிரி, அம்முவிற்கு எந்த தர்ம சங்கடம் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அம்முவை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றார்.
மகாநதி:
உடனே விஜய், உங்களுக்கு அம்முவை ரொம்ப பிடித்திருக்கிறது. என்னை திருமணம் செய்து கொள்ள சொன்னது தான் எனக்கு பிடிக்கவில்லை. நானே உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டார். இதனால் காவேரி மீண்டும் விஜய் மீது கோபப்பட்டு சென்றார். அதற்குப் பின் காவிரியின் வீட்டிற்கு வந்த விஜய், சாரதாவிற்கு போன் வாங்கி வந்து தந்தார். அதெல்லாம் பார்த்து காவிரிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் பள்ளியில் நடக்கும் மதர்ஸ் டே விழாவில் அம்மு அம்மாவாக நான் தான் கலந்து கொள்ளப் போகிறேன் என்றார். இதை கேட்டு சாரதாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. பின் இதைப்பற்றி சாரதா, கங்கா- யமுனாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பள்ளியில் என்ன நடக்குமோ? என்று விஜய் ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அம்முவும் தன் அம்மா நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குப் பின் பள்ளியில் மதர்ஸ் டே விழா நடைபெறுகிறது. எல்லா மாணவர்களும் தங்களுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை எல்லாம் பார்த்து விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. பின் காவேரி, அம்முவை தனியாக அழைத்து செல்கிறார். அம்முவிற்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறார் காவிரி.
சீரியல் ட்ராக்:
இதை எல்லாம் பார்த்து விஜய்க்கு சந்தோசமாக இருக்கிறது. பின் பள்ளியில் விழா தொடங்குகிறது. ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய அம்மாவுடன் வந்து பெர்ஃபார்மன்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய் என்ன நடக்குமோ என்று கவலையில் இருக்கிறார். அப்போது காவேரி-அம்மு இருவரும் சேர்ந்து மேடையில் நடனம் ஆடுகிறார்கள். அதை பார்த்து விஜய் எமோஷனாக அழுகிறார். பின் விஜய், அவர்கள் நடனமாடியதை வீடியோவாக எடுத்து வைத்து கொள்கிறார்.