காவிரி சொன்ன விஷயத்தை கேட்டு துள்ளி குதிக்கும் விஜய் - இறுதி கட்டத்தை நோக்கி மகாநதி
காவிரி சொன்ன விஷயத்தை கேட்டு துள்ளி குதிக்கும் விஜய்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், அம்முவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிட்டேன். ஆனால், அவளிடம் அதைப் பற்றி எதுவும் கேட்டுக்காதீர்கள் என்றார். அதற்குப்பின் சாரதா- கங்கா இருவரும் அம்முவை பார்த்து பேசி இருந்தார்கள். அம்மு காவிரியை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். சாரதா, சீக்கிரத்திலேயே நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம் கவலைப்படாதே என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு அம்முவை தயார் செய்தார். இன்னொரு பக்கம் காவேரி, வீட்டில் அம்மாவும் அக்காவும் இல்லாததை பற்றி நர்மதாவிடம் கேட்டார்.
அம்மு பள்ளிக்கூடத்திற்கு அழகாக தயாராகி வந்தார். விஜய், காவிரியிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்று அம்மு சொல்லக்கூடாது என்றார். அம்மு சரி என்றார். பின் பள்ளிக்கூடத்திற்கு வந்த அம்முவை பார்த்து காவிரி ரொம்ப எமோஷனலாக விசாரித்தார். அம்முவும் ரொம்ப சந்தோஷமாக தன்னுடைய அம்மாவிடம் பேசி இருந்தார். ஆனால், உண்மையை எதுவுமே சொல்லவில்லை. பின் கிளாஸ் ரூமில் அம்மு, என்னுடைய அம்மா இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என்று தன்னுடைய நண்பர்களுடன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், தன்னுடைய அம்மா காவிரி தான் என்று உண்மையை சொல்லவில்லை.
மகாநதி:
காவேரி- அம்மு தன்னுடைய அம்மா காவிரியை ரசித்து பார்த்து சந்தோசப்பட்டார். அதுமட்டுமில்லாமல் சாப்பாட்டை ஊட்டி விட சொல்ல, காவிரியும் ஊட்டி விட்டார். அதற்குப்பின் யாழினி, அம்மு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாழினி, உன் அம்மா இறந்து விட்டதாக சொல்லிவிட்டு, ஏன் இப்போது உயிருடன் இருக்கிறாய்? என்றார். அதற்கு அம்மு, என்னுடைய அம்மா உயிருடன் தான் இருந்தார். உன்னுடைய காவிரி சித்தியும் என்னுடைய அம்மாவும் ஒன்றுதான் என்று நடந்த உண்மை சொன்னார். யாழினி, நான் இதை சித்தி இடம் சொல்லப்போகிறேன் என்றார். உடனே யாழினி கையை பிடித்து உண்மையை சொல்லக்கூடாது என்று அம்மு தடுத்தார்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் யாழினி கையை உதறும் போது கீழே தவறி விழுந்து விட்டார். அப்போது வந்து காவிரி,யாழினிக்கு முதலுதவி செய்தார். இதனால் யாழினி, அம்மு மீது கோபமாக இருந்தார். அம்மு, மன்னிப்பு கேட்டுவிட்டு உண்மை தெரிந்தால் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போகும் தயவு செய்து சொல்லாதே என்று யாழினியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். இன்னொரு பக்கம் சாரதா, அம்முவிற்கு காவிரி தான் தன் அம்மா என்ற உண்மை தெரிந்த விஷயத்தை சொன்னார். இதைக்கேட்டு நிவின், யமுனா எல்லோரும் ஷாக் ஆனார்கள். எப்படியாவது விஜய் காவிரியை சேர்த்து வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார்கள்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவிரி, உங்களை திருமணம் செய்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டார். ஆனாலும் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் என்கிறார். இதைக் கேட்டவுடன் விஜய் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். பின் ஒரு ஹோட்டலில் காவிரி- விஜய் இருவரும் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி செல்வதால் எல்லோருமே காவிரி- விஜய் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்