பிரபல இயக்குனர் மகேந்திரன் இன்று காலமாகியுள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேந்திரன். சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன்.

பல்வேறு படங்களை இயக்கிய இவர் விஜயின் தெறி, ரஜினியின் பேட்ட, உதயநிதியின் நிமிர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன் காலமானதை அவரது மகன் ஜான்மகேந்திரன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : ஏமாற்றிய முன்னாள் காதலர்.! காதலியிடம் போட்டு கொடுத்த டாப்ஸி.! இப்படி கூடவா பண்ணுவாங்க.! 

Advertisement

மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரனும் ஒரு இயக்குனர் தான். இவர் தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சச்சின்’ படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மகேந்திரன், இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லை என்றும் மேலும், தன் மகனிடம் உன் திறமை இது இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், அடுத்த ஆண்டே மகேந்திரனின் மகன் ஜான் ‘ஆணிவேர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் இலங்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டிருந்தது. அந்த படத்தை பார்த்துவிட்டு தன் மகனை நினைத்து பெருமிதம் கொண்டாராம் இயக்குனர் மகேந்திரன்.

Advertisement
Advertisement