பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமாகியுள்ள சம்பவம் தான் தற்போது தமிழ் திரையுலகையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு நடிகர் நடிகைகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது சர்ச்சையான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை கொடுக்கும் கை’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 

Advertisement

மகேந்திரன் உடல் பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா, பாரதிராஜா உள்பட திரைஉலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகேந்திரன், எல் எல் டி டி அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இருந்த ஈழ தமிழர்களுக்காக போராடி ஊயிரை விட்டவர் பிரபாகரன். இவரை வைத்து இன்றளவும் பலர் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், பிரபாகரனை, இயக்குனர் மகேந்திரன் சந்தித்துள்ளது அவர் மறைந்த பின்பே வெளியுலகிற்கு வந்துள்ளது. எதற்காக பிரபாகரனை மஹேந்திரன் சந்தித்தார் என்பது தான் புரியாத உள்ளது.

Advertisement
Advertisement