கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட வேண்டாம் என்று அட்வைஸ் செய்த ரசிகருக்கு மாளவிகா கொடுத்துள்ள பதில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள மொழியில் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படம் மூலம் தான் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.

பின் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவர் தமிழில் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கி இருந்தார். இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்து விளக்காக நடித்திருந்தார் மாளவிகா.

Advertisement

இதையும் பாருங்க : சிறு வயதில் கோவை சரளா வாழ்ந்த வீடு, தனி வீட்டில் வாழ்ந்து வரும் அவரின் தாயார். அறிய வீடியோ.

மாளவிகா திரைப்பயணம்:

அதுவும் பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகாவை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்து இருந்தார்கள். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை பார்த்து தான் இவர் இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

Advertisement

மாறன் படம்:

தற்போது இவர் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தையே பெற்றது.

Advertisement

மாளவிகாவின் ஆல்பம் பாடல்:

இது ஒரு பக்கம் இருக்க, மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரில்ஸ் வீடியோ என்று ஏதாவது ஒன்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஒவருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் Tauba என்ற ஆல்பம் பாடலில் நடித்திருக்கிறார்.

ரசிகர் கேட்ட கேள்விக்கு மாளவிகா கொடுத்த பதிலடி:

அதே போல தவறாமல் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் மாளவிகா சமீபத்தில் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘பீக் Hourகளில் புகைப்படம் போடுவதை நிறுத்துங்கள் சென்னையில் உள்ள பல ரோடுகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. உங்களை பார்த்து சாய்ந்து நான் குழிக்குள்ளே விழுந்து இருப்பேன்.’ என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு மாளவிகா ‘இந்த பாராட்டுக்கு 100க்கு 10 மதிப்பெண் தான்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement