மலையாள நடிகை மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க பத்து நிமிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என்று இளம் நடிகை அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமாவுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் மஞ்சு வாரியர். இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார்.

அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். பின் தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார்.

Advertisement

மஞ்சு வாரியர் குறித்த தகவல்:

மேலும், இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும் மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு 40 வயது கடந்து இருக்கிறது. இருந்தாலும், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். அப்படியே அடிக்கடி தமிழ் மொழியிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் துணிவு.

மஞ்சு வாரியர் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனை அடுத்து தற்போது இவர் மலையாள மொழி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் மஞ்சு வாரியருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என பல இளம் நடிகர், நடிகைகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் மஞ்சுவாரியின் தீவிர ரசிகையாக இருப்பவர் தான் நடிகை மாளவிகா ஸ்ரீநாத். மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்பவர் மாளவிகா ஸ்ரீநாத்.

Advertisement

மாளவிகா ஸ்ரீநாத் அளித்த பேட்டி:

இவர் நிவின்பாலின் நடித்த சாட்டர்டே நைட், மதுரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகை மாளவிகா ஸ்ரீநாத் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சம்பவம் குறித்து கூறியிருந்தது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மலையாள படம் ஒன்றில் மஞ்சுவரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. அவர்களுக்கும் அந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று எனக்கு இப்போ புரியுது. மஞ்சு வாரியார் படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது! அதனால் நானும் என் தங்கை மற்றும் தாயை அழைத்துக் கொண்டு திருச்சூரில் நடந்த ஆடிஷனுக்கு சென்றேன்.

Advertisement

வாய்ப்பு கேட்ட இடத்தில் நடந்தது:

ஒரு தனி அறையில் ஆடிஷன் டெஸ்ட் நடத்தினார்கள். ஆடிஷன் முடிந்ததும் அங்கிருந்து நபர், தலைமுடி சரியாக இல்லை என்று பக்கத்து அறைக்கு சென்று சரி செய்து வீட்டு வருமாறு கூறினார். நானும் அந்த அறைக்கு சென்றேன். என்னை பின்தொடர்ந்து வந்த நபர் என்னை கட்டிப்பிடித்து விட்டார். அவர் ஒரு உயரமான பெரிய மனிதர். அதனால் என்னால் அவரை தள்ளிவிட முடியவில்லை. நீ மனதை வைத்தால் திரையில் மஞ்சுவாரியரின் மகளாக இருப்பாய். பத்து நிமிடம் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் போதும் மஞ்சுவாரியரின் மகளாக நடிக்க வாய்ப்பு உனக்கே தரேன் என்று சொன்னார். நான் பயங்கரமாக ஆழ ஆரம்பித்து அவருடைய கேமராவை தட்ட முயற்சி செய்தேன். அதற்குள் அவருடைய கவனம் மாறியவுடன் நான் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டேன். இப்போது நினைத்தாலும் அது ஒரு பயங்கரமான சம்பவம் ஆக இருக்கிறது என்று மன வேதனை உடன் கூறியிருந்தார்.

Advertisement