சபரி மலைக்கு வரும் பெண்களை துண்டாக வெட்ட வேண்டும் ..!விக்ரம் பட நடிகர் ஆவேசம் ..!
கடந்த சில மாதங்களாகவே உச்ச நீதி மன்றம் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. ஓரினச்சேர்க்கை குற்றமில்லை, திருமணத்திற்கு பின் தகாத உறவு குற்றமில்லை போன்ற தீர்ப்புகளை தொடர்ந்து சபரி மலைக்கு எந்த வயது பெண்கள் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தீர்ப்பை வழங்கி இருந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரி மலை சன்னதியில் அனுமதிக்கபடாமல் இருந்த நிலையில் உச்ச நீதி மன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்த நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரி மலை கோவிலுக்கு பெண்கள் வந்தால் இரண்டு துண்டுகளாக வெட்டப்படுவார்கள் என்று பிரபல மலையாள நடிகர் துளசி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் துளசி தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான "அருள் " படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி வேண்டும் என்ற 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அன்று முதல் சபரி மலைக்கு பெண்கள் அனுமதிக்கபடாதா இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை குறித்து பிரபல மலையாள நடிகர் துளசி என்பவர் சமீபத்தில் பதிரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய நடிகர் துளசி, சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என்றும்.வெட்டப்பட்ட உடலின் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். சபரி மலைக்கு அனைத்து வயது பெண்களும் வரலாம் என்ற உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது நடிகர் துளசி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.