தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்தவர் மலேசியா வாசுதேவன். இவர் என்பது ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவர் முதலில் மலேசியாவில் தான் பல நாடகங்களில் நடித்தார். அந்த அனுபவத்தை வைத்து தான் இவர் ரத்த பேய் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.

இந்நிலையில் மலேசியா வாசுதேவனின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து பலரும் இவர் தானா மலேசியா வாசுதேவனின் மகன் என்று ஆச்சரியப்பட்டு வியந்து போய் உள்ளார்கள். அவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் யுகேந்திரன் தான். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர்.

Advertisement

இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இதுவரை 600-க்கும் பாடல்களை பாடியுள்ளார். தன் தந்தையை போல் இவரும் மிக சிறந்த பாடகர். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிபிடத்தக்கது. இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தளபதி விஜயுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் யுகேந்திரன் சிறு வயதில் தன் தந்தை உடன் இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement