பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் குறித்து சொன்ன தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவருக்கு வேட்டையாடு விளையாடு, முன்தினம் பார்த்தேனே உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே கை கொடுத்த நிலையில், இப்போது தயாரிப்பில் இருந்து விலகியுள்ளார்.

சமீப காலமாக சமூக வலைதளத்தில் இவர் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தயாரிப்பிலேயே வேட்டையாடு விளையாடு படம் மட்டுமே மிகச்சிறப்பாக அமைந்ததாகவும் மற்றவை எல்லாம் குப்பைகளாகவே அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார் மாணிக்கம் நாராயணன். விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

சிம்பு குறித்து:

இந்நிலையில் சிம்பு குறித்து தன்னுடைய பேட்டியில் பேசியுள்ள மாணிக்கம், நடிகர் சிம்புவிற்கும் தனக்கும் செட்டாகாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சிம்புவை வைத்து தன்னால் படம் தயாரிக்க முடியாது என்று தான் கௌதம் மேனனிடம் கூறியதாகவும், அப்படி தயாரிக்க வேண்டும் என்றால் சிம்புவின் அப்பா டி ராஜேந்திரனர் வந்தால் தான் முடியும் என்று கெளதம் மேனனிடம் கூறியதாகவும், அதை அப்படியே கௌதம் சிம்புவிடம் போட்டு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

சிம்புவின் மாற்றம் குறித்து :

மேலும் அவர் கூறுகையில், இது குறித்து தன்னிடம் சிம்பு தொலைபேசி மூலம் கேட்டதாக சொன்னார். டி ராஜேந்திரர் போலவே சிம்புவும் நல்ல பையன் தான் ஆனால், அவருடைய குண நலன்கள் எனக்கு செட்டாகாது என மாணிக்கம் கூறினார். அதனால் அவரை வைத்து படம் தயாரிக்க தான் தயாராக இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தற்போது சிம்புவின் குணங்கள் மற்றும் நடவடிக்கைகள் மாறி உள்ளதாக தெரிகிறது அது கண்டிப்பாக வரவேற்க வேண்டிய விஷயம் என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.

Advertisement

பிரபலங்களை விமர்சிப்பது:

அந்த வகையில் அஜித், மணிரத்தினம் உள்ளிட்ட பலரையும் அவர் தன்னுடைய பேட்டிகளில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம். விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் அஜித்துக்கு கிடையாது என்று இவர் தன்னுடைய பேட்டில் கூறியிருந்தார். அஜித்தை தானாக யாரும் முன்வந்து படத்தில் நடிக்க அழைக்க மாட்டார்கள் என்றும் இவராகச் சென்று தான் படங்களை கமிட் செய்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அஜித் குறித்து:

அதுபோல் படங்களில் நடிக்கும் போது முன்னதாகவே தனக்கான பணத்தை வாங்கிக் கொள்வார் என்றும் பலவாறாக இவர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அஜித்தின் ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதனிடையே தான் உண்மையைத்தான் கூறுவதாகவும் அதனால் தான் இத்தகைய விமர்சனங்கள் செய்தாலும் தன்னிடம் யாரும் சண்டைக்கு வருவதில்லை என்றும் கூறிய மாணிக்கம், அவ்வாறு சண்டைக்கு வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் தன்னிடம் அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement