வெங்கட் பிரபு எனக்கு துரோகம் பண்ணிட்டார் ! சோகத்தில் வழக்கு என் 18/9' நடிகை மனிஷா யாதவ்

By Ajju · 28/12/2017
தமிழில் 'வழக்கு என் 18/9' படத்தில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன் பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் மனிஷா. தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாத அவர், இயக்குனர் வெங்கட் பிரபு ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வருடம் வந்த படங்களில் சென்னை 28 படமும் ஒன்று. இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னர் வெளிவந்த சென்னை 28 படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தில் வந்த சொப்பன சுந்தரி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இந்த பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியிருப்பார் மனிஷா யாதவ். ஆனால் இந்த பாடலுக்கு ஆடிய மனிஷா யாதவ் வெங்கட் பிரபு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். இந்த பாடல் படத்தில் ஒரு முக்கியமான பாடலாகும், இங்குதான் படத்தின் கதைக்களமே மாறுகிறது எனக் கூறி தான் என்னை சம்மதிக்க வைத்தார் வெங்கட்பிரபு. ஆனால் அது வெறும் ஐட்டம் சாங் தான் என எனக்கு தெரியாமல் போனது. படம்.வெளியான பின்பு தான் வெங்கட் பிரபு என்னை ஏமாற்றியது தெரிந்தது. எனக் கூறினார் மனிஷா யாதவ்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full